தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இ.கா.ப., சென்னை நொளம்பூர் காவல் நிலையத்தில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்...
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு. செ.சைலேந்திரபாபு, இ. கா.ப., அவர்கள் சென்னை காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட நொளம்பூர் காவல் நிலையத்தில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காவல் நிலைய பதிவேடுகளையும், குற்ற நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்து வழக்குகளில் புலன் விசாரணை நிலையை பற்றி கேட்டறிந்தார்கள்.
குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துக்கள் நடவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்கள்.

மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அவர்களின் குறைகளை உடனுக்குடன் களைய காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காவல் நிலைய கோப்புகளை சிறப்பாக பராமரித்ததற்காக காவல் நிலைய துணை எழுத்தர் பெண் காவலர் திருமதி.லலிதாவிற்கு ரூபாய் 5000 பண வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
காவலர்களுக்கு முறையாக வாராந்திர ஓய்வு வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்து காவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
Jpr, Chennai


Comments (0)
Facebook Comments (0)