கோவை மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன் IPS., அவர்கள் லட்சுமி மில் சந்திப்பில் Pedestrian Crossing Marking வசதி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்...
கோவை மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன் IPS., அவர்கள் உத்தரவின் பேரில், கோவை மாநகர எல்லைக்குட்பட்ட முக்கிய சாலைகளில் செயல்பட்டு வரும் தானியங்கி போக்குவரத்து சிக்னல்களில் பாதசாரிகள் நடப்பதற்கென தனிப்பட்ட முறையில் சிக்னல்கள் ஏதும் இல்லாமல் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு சிரமப்படும் நிலையை போக்கி முக்கிய சாலை சிக்னல்களில் பாதசாரிகளின் சந்திப்பகளில் பாதுகாப்பு உள்ள போக்குவரத்து உறுதிசெய்ய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அதன் முன்னோடியாக லட்சுமி மில் சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னலில பாதசாரிகளும் கடந்து செல்வதற்கு ஏதுவாக Countdown சிக்னல் வசதி, பாதசாரிகள் சாலையை பாதுகாப்பான முறையில் கடந்து செல்ல மேம்படுத்தப்பட்ட Pedestrian Crossing Marking வசதி, போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு ஆடியோ ஒலிபரப்பு செய்யும் வசதி, பணியிலிருக்கும் போக்குவரத்து காவலர் ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் அறிவுறைகள் வழஙகும் வசதி, ஆகியவைகளை கோவை மாநகர காவல் ஆணையர் அவர்கள் 18.07.2022-ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்...
போதிவர்தன், கோவை.


Comments (0)
Facebook Comments (0)