அம்பாசமுத்திரம் டிஎஸ்பி பிரான்சிஸ் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கினார்...

நெல்லை மாவட்டம் வி.கே.புரம் காவல் நிலையத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் தாலுகா வி.கே.புரம் காவல் நிலையத்தில் வைத்து அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் வி.கே.புரம் காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்களும் இணைந்து ஊனமுற்றோர் மற்றும் நலிவடைந்தோர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக வி.கே.புரம் காவல் நிலையத்தில் வைத்து கொரானா தொற்று ஊரடங்குகாலத்தில் வாழ்வாதாரம் இழந்த ஊனமுற்ற மற்றும் நலிவடைந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்  அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. பிரான்சிஸ் அவர்கள் வி.கே.புரம் காவல் துறையினர் மற்றும் பார்வையற்றோர் ஊனமுற்ற பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.